அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Thursday, December 10, 2015

தக்தீரைப் பற்றி நபி (ஸல்) அவர்களின் கூற்று


சுருக்கமாக, இறை நியதியின் மீது ஈமான் கொள்ளுதல் மிக முக்கியமான விஷயமாகும். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(லா யுவ்மினு அப்துன் ஹத்தா யுமின பில் கத்ரி ஹைரிஹி வ ஷர்ரிஹி)

அதாவது, நான்மை தீமைகள் பற்றிய இறை நியதியின் மீது நம்பிக்கை கொள்ளாதவரை எந்தவொரு அடியாரும் நம்பிக்கையாளராக இருக்க முடியாது. மேலும் கூறினார்கள்:

(மன் லம் யுமின் பில் கத்ரி ஹைரிஹி வ ஷர்ரிஹி ப அநா பரியும் மின்ஹு)

பொருள்: எவர் நன்மை தீமைகளின் நியதியின்மீது ஈமான் கொள்வதில்லையோ அவரை விட்டும் நான் விலகியிருக்கிறேன்.

ஆக, இறைநியதிக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே ‘விதி’ யின் விவகாரம் ஒரு முக்கியமான விவகாரம் ஆகும். நம்பிக்கை கொண்டவர்களுடன் தமக்கு இடம் கிடைக்க வேண்டும் என்று விரும்புபவருக்கு தக்தீரின் மீது நம்பிக்கை கொள்வது மிக அவசியம். ஒருவர் தம்மை முஸ்லிம் என்று வாதித்து தக்தீரின் மீது நம்பிக்கை கொள்ள வில்லையாயின் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் போதனைகளின்படி அவர் முஸ்லிமாக மாட்டார். ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் சேவகர்கள் மற்றும் அன்னாரைப் பின்பற்றுபவர்களுக்குப் பெயர்தான் முஸ்லிம். எனவே யார் முஸ்லிம், யார் முஸ்லிம் அல்ல என்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடத்திளிருந்தே தீரப்பு வேண்டப்படும். ஆகவே இறை நியதியின் மீது நம்பிக்கை கொள்ளாதவர் முஸ்லிம் ஆக முடியாது. ஏனென்றால் இறைநியதியின் மீது நம்பிக்கை கொள்ளாதவரை எந்தவொரு மனிதரும் முஸ்லிமாக மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.