தக்தீரே முப்ரம் (நீங்காத விதி) என்பது குறிப்பிட்ட நிலைமைகளினாலேயே தவிர நீங்குவதில்லை என நான் முன்னரே குறிப்பிட்டேன். தக்தீரே முப்ரம் நீங்குதல் என்றால் என்ன பொருள் என்பதைப் பற்றி இப்போது கூறுகிறேன். தக்தீரே முப்ரம் நீங்குதல் என்றால் அது உண்மையிலேயே முற்றிலுமாக நீங்கிவிடுகிறது என்று பொருளல்ல. மாறாக அதன் நிலை மாறிவிடுகிறது: அது வேறொரு வகையில் மாற்றப்படுகிறது என்பதே அதற்குப் பொருள். இந்த தக்தீர் நுட்பத்திலும் நுட்பமான இரகசியங்களின் அடிப்படையில் இறங்குகிறது. அது மாறி விடுவதால் சிலநேரத்தில் இன்னும் பல சட்டங்களின்மீது அது தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஆகவே இந்த தக்தீர் அல்லாஹ்வின் சிறப்பு ஹிக்மத்தின் அடிப்படையில் முழுவதுமாக நீக்கப்படுவதில்லை.
அல்லாஹ்வை அஞ்சி நடப்பவருக்கு அவன் ஏதேனும் ஒரு வழியை ஏற்ப்படுத்துவான். அவர் எதிர்பாராத இடத்திலிருந்து அவன் அவருக்கு உணவு அளிப்பான். அல்லாஹ்விடம் நம்பிக்கை வைப்பவருக்கு அவனே போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தனது நோக்கத்தை நிறைவேற்றுவான். அல்லாஹ் ஒவ்வொன்றிற்க்கும் ஓர் அளவை நியமித்துள்ளான். (திருக்குர்ஆன் 65:3,4)
தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.
இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.
தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக
இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.
இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.
தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக
Monday, January 11, 2016
Subscribe to:
Posts (Atom)