அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Saturday, December 12, 2015

எல்லா செயலையும் இறைவனே செய்ய வைக்கிறான் என்ற சிந்தனைக்கு மறுப்பு


எவர்கள், மனிதன் செய்வதையெல்லாம் இறைவனே செய்ய வைக்கிறான்; மனிதனுக்கு அதில் எந்த அதிகாரமும் இல்லை என்று கூறுகிறார்களோ அவர்கள் தமக்கு சாதகமாக திருக்குர்ஆனிலுள்ள சூரா சப்பாத் அதிகாரத்தில் பின்வரும் வசனங்களை எடுத்து வைக்கிறார்கள்;

(வல்லாஹு கலககும் வமா தஹ்மலூன்)

அல்லாஹ்தான் உங்களையும் உங்கள் செயல்களையும் படைத்துள்ளான்.

விதியைப் பற்றிய முஸ்லிம்களின் தவறான கொள்கைக்கு அடிப்படை


ஆக, இது ஒரு குழப்பத்தை ஏற்ப்படுத்தும் முறையாகும். இதனையே ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆனால் முஸ்லிம்கள் தடை செய்ததை கவனத்திற்கொள்ளாது மாபெரும் தடுமாற்றங்களை அவர்கள் அடைந்தனர். அவர்களில் சிலரோ தம் கொள்கைகளுக்கு யூனானி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டார்கள். சிலர் இந்தயாவிலுள்ள தத்துவவாதிகளின் கொள்கையை அதாவது, ‘வஹ்ததுல் வுஜூத்’ எனும் அத்வைதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டார்கள். இன்னும் சிலர் நாத்திகக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டார்கள். இந்தியாவில் வஹ்ததுல் வுஜூத் எனும் அத்வைதக் கொள்கை மிகப் பரவலாகக்

தக்தீர் விவகாரத்தை புரிந்து கொள்ளாததன் விளைவு


இந்துக்களில் மறுபிறவிக் கொள்கை ‘விதி’ பற்றிய விவகாரத்தைப் புரிந்து கொள்ளாத காரணத்தாலேயே உருவானது. மேலும் இதனைப் புரியாததனாலேயே கிறிஸ்தவர்களிடத்தில் பாவ மன்னிப்புக் கொள்கை உருவாக்கப்பட்டது. முதலில் இறைவனின் கருணை எனும் பண்பு மறுக்கப்பட்டது. அதன் விளைவாக பாவ மன்னிப்புக் கொள்கை (அதாவது மனித பாவங்களுக்காக இயேசு பலியானவர் என்ற கொள்கை) உருவானது. மேலும் பாவ மன்னிப்புக் கொள்கையின் விளைவாக தேவ குமாரன் மற்றும் ஷரீஅத்தை சாபமாகக் கூறும் கொள்கைகள் உருவாயின. பின்னர் அதன்