அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று கூறுவதனால் அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும் அவர்கள் சோதனைளுக்கு ஆளாக்கப்பட மாட்டார்களென்றும் மக்கள் என்னுகின்றனரா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம் எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான். (29:3,4) . 

தலைவிதி என்றும் தலையெழுத்து என்றும் பொதுவாக பாமர மக்களால் தவறாகப் பேசப்படுகின்றதைத்தான் இஸ்லாம் ‘தக்தீர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. தக்தீரே இலாஹி என்றால் இறைவன் வகுத்த நியதி என்று பொருள். ஒருவர் நன்மை, தீமையின் நியதியை அறிந்து அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவரை உண்மையான இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார் என் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த இறை நியதியை சரியாகப் புரியாததன் காரணமாகத்தான் இந்துக்களிடம் மறுபிறவிக் கொள்கையும். கிருஸ்தவர்களிடம் பாவமன்னிப்புக் இயேசு பலியானார் என்ற கொள்கையும், ஐரோப்பிய தத்துவவாதிகளிடம் நாத்திகக் கொள்கையும் உருவானது.

இறைநியதி பற்றிய இஸ்லாத்தின் அறிவுப்பூர்வமான போதனைகளை இரண்டாவது கலீபத்துல் மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மது (ரலி) அவர்கள் 1919 ஆம் ஆண்டு காதியானில் நடைபெற்ற ஆண்டு மாநாட்டில் உரையாற்றும்போது மிக அருமையாக விளக்கிக் கூறினார்கள்.

தற்போது O.M. முஸம்மில் அஹமது அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். அதனை நாம் இங்கு தொகுத்து வெளியிடுகிறோம். இதனை படிப்பவர்களுக்கு தலைவிதி பற்றிய சந்தேகங்கள் நீங்குவது மட்டுமல்லாது அதன் உண்மை நிலை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனை கவனமாக படித்து பயனடைய அல்லாஹ் உதவி செய்வானாக

Thursday, December 10, 2015

இறைவன் மீது நம்பிக்கை கொள்வதற்கு தக்தீரின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியம்.


திருக்குர்ஆனில் இது பற்றி தனித் தனியாக குறிப்பிடப்படாமல் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதிலேயே இணைத்துக் கூறப்பட்டுள்ளது. என்றாலும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இதனைத் தனியாக எடுத்துரைத்துள்ளார்கள். இறைவனின் பண்புகளை ஏற்றுக் கொண்டால்தான், அவனை உண்மையான முறையில் ஏற்றுக் கொண்டதாக ஆகும். அவ்வாறில்லாமல் இறைவனை மட்டும் ஏற்றுக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அப்படிப் பார்த்தால் பல நாத்திகர்களும் இறைவனை ஏற்றுக் கொள்கிறார்கள். ஏனெனில் ‘நாங்கள் இறைவனை நம்புவதில்லை என்று கூறுவது தவறாகும். நாங்கள் இறைவனை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அவன் வானவர்களை இறக்குகிறான்; நபியை அனுப்புகிறான்; அவன்

தக்தீர் ஈமான் கொள்ள வேண்டிய விஷயங்களுள் ஒன்றாகும்.


எவ்வாறு நபி (ஸல்) அவர்கள் வேறு விஷயங்களை அவசியம் என்று கருதி அதில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவ்விஷயங்களை ஈமான் கொள்ள வேண்டிய விஷயங்களில் உள்ள ஒன்றாக சேர்த்துக் கொண்டார்களோ அவ்வாறே தக்தீரையும் சேர்த்துக் கொண்டார்கள் என்று சிலர் நினைக்கலாம். உதாரணமாக, ‘எவர் பிற சமுதாயத்தினரைச் சார்ந்தவராக தன்னை பறைச்சாற்றிக் கொள்வாரோ – அதாவது ஸய்யத் குடும்பத்தைச் சாராதவராயிருந்து, தன்னை ஸய்யத் என்று கூறுவாரோ அவர் முஹ்மின் ஆகமாட்டார்’ என்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிமைக் கொலை செய்வது ‘குப்ர்’ ஆகும் என்றும் கூறியுள்ளார்கள். அவ்வாறே இன்னும் பல விஷயங்களைக் குறித்து, எவர் இவ்வாறு

தக்தீரைப் பற்றி நபி (ஸல்) அவர்களின் கூற்று


சுருக்கமாக, இறை நியதியின் மீது ஈமான் கொள்ளுதல் மிக முக்கியமான விஷயமாகும். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(லா யுவ்மினு அப்துன் ஹத்தா யுமின பில் கத்ரி ஹைரிஹி வ ஷர்ரிஹி)

அதாவது, நான்மை தீமைகள் பற்றிய இறை நியதியின் மீது நம்பிக்கை கொள்ளாதவரை எந்தவொரு அடியாரும் நம்பிக்கையாளராக இருக்க முடியாது. மேலும் கூறினார்கள்: