தக்தீர் என்பதன் பொருள் பொது மக்கள் கருதுகின்ற, தத்துவவாதிகள் நம்பிக் கொண்டிருக்கின்ற அதே பொருள் அல்ல என்பது இதுவரை கூறியதிலிருந்து தெரிய வருகிறது. அதாவது எதைச் செய்தாலும் அது மனிதன் செய்வதுதான் என்பதோ அல்லது செய்வதெல்லாம் இறைவன் செய்ய வைப்பவைதான்; நமக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்பதோ தக்தீர் (இறை நியதி) ஆகாது. மாறாக, தக்தீர் என்பது இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வழியாகும். அதுதான் சரியானதும், இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்றதுமாகும். இப்போது தக்தீருக்கும் மனித செயல்களுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றி சிறிது விளக்கமாகக் கூறுகிறேன்.
முதலில் கூறியுள்ளதைப் போன்று, தக்தீர் பலவகைப்படும் என்பதை நன்றாக